tamilnih 41 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் இந்தியா..!

Share

செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் அனுப்பும் இந்தியா..!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடுத்த பயணத்தில் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகொப்டர்களை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் பெப்ரவரியில் நாசாவின் இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோன் செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது, இதன்மூலமாக செவ்வாய் வளிமண்டலத்தில் விமானத்தை தரையிறக்குவது சாத்தியமான விடயம் என்பதை நாசா நிரூபித்துக்காட்டியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO) தற்போது இங்கேன்னுய்ட்டி ( Ingenuity) ட்ரோனின் சாயலில் ஹெலிகொப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் மங்கள்யான் லாண்டருடன் இணைந்து இந்த ஹெலிகாப்டர்களை செவ்வாய்க்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில் செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலமானது 2014 ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர் 08 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இந்த விண்கலம் கடந்த 2022 ஆம் ஆண்டு பூமியுடனான தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டது.

எவ்வாறாயினும், இஸ்ரோ தனது முயற்சிகளை கைவிடாமல் மீண்டும் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது, இப்போது விண்கலத்துடன் இணைந்ததாக ஹெலிகொப்டர் ஐயும் செவ்வாய்க்கு அனுப்பும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.

இந்த முயற்சியில் பறக்கும் ட்ரோனுக்கான திட்டமிடப்பட்ட அறிவியல் பேலோடுகளில் வெப்பநிலை சென்சர், ஈரப்பதம் சென்சர், அமுக்க சென்சர், காற்றின் வேக சென்சர், மின் புல சென்சர் மற்றும் தூசி ஏரோசோல்களின் செங்குத்து விநியோகத்தை அளவிடக்கூடிய தூசு சென்சர் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு ட்ரோனுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிரவும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்வதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 328 அடி (100 மீட்டர்) வரை பறக்கும் திறன் கொண்டதாக இந்த ட்ரோன் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...