tamilni 569 scaled
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Share

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 22-ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான போட்டி அட்டவணையை அண்மையில் வௌளியானதுக்கமைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சிவம் தூபேவிற்கு ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குணமடைய சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் அவர் இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் ஷிவம் தூபேவை தொடர்ந்து மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ரி20 தொடரில் விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் அவர்கள் இருவருமே காயமடைந்துள்ளதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...