Screenshot 2024 01 31 063750 670x430 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

Share

பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்… தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

பிரித்தானியாவில், படகொன்றில் கொண்டுவரப்பட்ட குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த புலம்பெயர்ந்தோர் ஆறு பேர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 9.40 மணியளவில், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் படகொன்று தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு சசெக்சிலுள்ள Newhaven என்னுமிடத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர், மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் விரைந்துள்ளனர்.

அப்போது படகொன்றில் வந்த குளிரூட்டபட்ட லொறி ஒன்றிற்குள் புலம்பெயர்ந்தோர் சிலர் அடைபட்டிருப்பது தெரியவரவே, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு, எசெக்சில் இதேபோல லொறி ஒன்றிற்குள் அடைபட்டிருந்த 39 புலம்பெயர்ந்தோர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, இம்முறை லொறிக்குள் அடைபட்டிருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். பெரும் அசம்பாவிதம் ஒன்று தவிர்க்கப்பட்டாலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...