tamilni 329 scaled
உலகம்செய்திகள்

தேர்தலில் ரிஷி கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்… அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

Share

தேர்தலில் ரிஷி கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்… அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சார்ந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, வரும் பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் முக்கால்வாசிப்பேர் தோல்வியை சந்திப்பார்கள் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் மூலமாக தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Find Out Now and Electoral Calculus என்னும் ஆய்வமைப்பு, 18,000 பிரித்தானியர்களிடையே சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில், ரிஷி கட்சியினரின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் இருக்கைகளை தக்கவைத்துக்கொள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அவகியில் ரிஷியின் கன்சர்வேட்டிவ் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்றும், கேபினட் அமைச்சர்களில் 17 அல்லது 18 பேர் பதவி இழக்க நேரிடும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், கேர் ஸ்டாமரின் லேபர் கட்சி, 452 இருக்கைகளுடன் பெரும் வெற்றி பெறும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. லேபர் கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் வெற்றி, 1997இல் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிடைத்ததைவிட பெரிய வெற்றியாக இருக்கும் என்றும், அக்கட்சிக்கு மக்களிடையே 42 சதவிகித ஆதரவு உள்ளது என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கோ, 22 சதவிகித ஆதரவே உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஊடகங்கள், கேர் ஸ்டாமரை பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் என்றே அழைக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...