tamilni Recovered 5 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்

Share

இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கிய சரக்கு கப்பல் தொடர்பில் புதிய தகவல்

அவுஸ்திரேலியாவில் இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் சிக்கியுள்ள சரக்கு கப்பலில் இருந்து மொத்த ஆடு மாடுகளையும் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எதிர்வரும் வாரங்களில் இன்னொரு கப்பலில் அந்த ஆடு மாடுகளை அடைத்து இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MV Bahijah என்ற அந்த சரக்கு கப்பலில் 16,000 ஆடு, மாடுகள் ஏற்றப்பட்டு சுமார் நான்கு வாரங்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் அந்த மிருகங்களை நடத்தும் விதம் கொடூரமானது என்று ஆர்வலர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

ஜனவரி 5ம் திகதி இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் அந்த கப்பல் புறப்பட்டுள்ளது. ஆனால் ஹவுதிகள் செங்கடல் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருவதை குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் கப்பலை திரும்ப அழைத்துள்ளனர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், அந்த கப்பல் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது. இதனிடையே, சில விலங்குகளை இறக்கி விட்டு, மீதமுள்ளவற்றை ஆப்ரிக்காவைச் சுற்றி, சுமார் 33 நாட்கள் பயணித்து இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதிக்குமாறு ஏற்றுமதியாளரின் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் திங்களன்று மறுத்துள்ளது.

ஆனால் தற்போது விலங்கு நல ஆர்வலர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, அந்த கப்பலில் இருந்து மொத்த விலங்குகளையும் வெலியேற்றி, உரிய பரிசோதனைக்கு பின்னர் இன்னொரு கப்பலில் இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவாகியுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இருந்து ஆடு மாடுகளுடன் ஜோர்தானுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்றும் ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக பயணத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...