tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்… ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்

Share

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்… ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக, ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின் காதல் கதையை அறியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். சார்லசைக் காதலித்து, திருமணம் குறித்து சரியான முடிவு எடுக்காமல் வேறொரு நபரைத் திருமணம் செய்து, அதனால் சார்லஸ் கடமைக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, இருவருமே சரியாக வாழாமல், பிரிவு, விவாகரத்து, ஒரு அநியாய உயிரிழப்பு என சார்லஸ் கமீலாவின் காதல் கதையின் பின்னணியை வைத்து, ஒன்று இரண்டல்ல, பல திரைப்படங்கள் எடுக்கலாம்.

கடைசியில், தங்கள் 50 வயதுகளில் திருமணம் செய்துகொண்டார்கள் இருவரும். ஆனாலும், அந்த மகிழ்ச்சி தமபதியரிடம் அப்பட்டமாக தெரிவதை இன்றும் காணமுடியும். ஆக, வயது முதிர்ந்தும், அவர்களுடைய காதல் வற்றவில்லை என்றே தோன்றுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ராணி கமீலாவுக்கு ஒரு அச்சம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் (Jennie Bond) என்பவர்.

ஒருவேளை மன்னர் தன்னைப் பிரிய நேர்ந்தால் தன் நிலைமை என்ன ஆகும் என அவர் எண்ணக்கூடும் என்கிறார் ஜென்னி.

உண்மையாகவே அது ஒரு முக்கியமான கேள்விதான். ஏனென்றால், மன்னர் சார்லசின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தாலும், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மனதில் இடம் பிடிக்க கமீலா பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

இளவரசர் வில்லியம் மனதில் அடித்துப் பிடித்தாவது இடம் பிடித்து விட்டாலும், இளவரசர் ஹரி தன்னை வில்லியாக பார்ப்பதாக அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஆக, மன்னர் எப்படியாவது உடல் நலம் பெற்றுவிடவேண்டும், தானும் அவரும் சேர்ந்தே முதுமையை அனுபவிக்கவேண்டும் என்றுதானே அவர் நினைப்பார்.

எனவே, மன்னர் இல்லாத ஒரு வாழ்வை தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதால், எப்படியாவது மன்னரை உந்தித் தள்ளி, இனியும் நீங்கள் இளைஞர் இல்லை, உங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும், அதற்கு உற்ற துணையாக நானும் உங்களுடன் இருக்கிறேன், சீக்கிரமாக உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்புங்கள் என்று கூறி, மன்னரை ராணி கமீலா உற்சாகப்படுத்துவார் என்றே தோன்றுகிறது என்கிறார் ஜென்னி.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...