tamilni Recovered scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்…

Share

பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்…

பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி குறித்து அவரிடம் விளக்கினார்.

இந்நிலையில், பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈபிள் கோபுரத்தைக் காண அதிக அளவில் செல்லும் வெளிநாட்டவர்களில், இந்திய சுற்றுலாப்பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...