tamilni 95 scaled
உலகம்செய்திகள்

இராணுவ முகாமை தாக்கியமைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

Share

இராணுவ முகாமை தாக்கியமைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

சமீபத்தில் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீதான தாக்குதல் ஈரானின் ஆதரவுடன் ஆயுதமேந்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சந்தேகத்திற்கிடமான 85 இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

30 நிமிடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் அந்த இடங்களில் 125 குண்டுகளை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கு பின்னர் ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், மத்திய கிழக்கில் போரை தீவிரப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் பதில் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், தேவையான நேரத்தில் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...