24 65bb69704acd7
உலகம்செய்திகள்

பாரிஸை அடுத்து பிரஸ்ஸல்ஸ் மீது திரும்பிய வேளாண் மக்களின் கோபம்: டிராக்டர்களால் ஸ்தம்பித்த தெருக்கள்

Share

அதிக வரி, தரமற்ற இறுக்குமதி, பசுமை விதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரஸ்ஸல்ஸ் நகரில் திரண்ட வேளாண் மக்களால் அங்குள்ள தெருக்கள் ஸ்தம்பித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தங்கள் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸ் நகரில் திரண்டனர்.

பூமியை நேசிப்பவர் என்றால், அதை பராமரிப்பவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என விவசாயி ஒருவர் பதாகையை தனது டிராக்டரில் காட்சிப்படுத்தியுருந்தார். வேளாண் மக்கள் இல்லை என்றால் ஏது உணவு என இன்னொருவரின் டிராக்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு டிராக்டர்களுடன் திரண்ட வேளாண் மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். சுமார் 1,000 டிராக்டர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருவில் சாலைகளை முடக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் தலைவர்களின் கூட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதை அடுத்து, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்,

இன்று நாம் இங்கு எத்தனை பேருடன் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்த்தால், ஐரோப்பா முழுவதும் இதுபோன்ற ஒரு நிலை இருப்பதை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். விவசாயம் அவசியம் என்பதையும் அதை இவர்கள் உரியமுறையில் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டும்.

இது உணவுக்கான போராட்டம், உங்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என குறிப்பிட்டுள்ள விவசாயிகள், வரி மற்றும் பசுமை விதிகளால் திணறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரான்சில், விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய டீசல் மீதான மானியங்களை படிப்படியாக குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது மற்றும் கூடுதல் உதவிகளை உறுதியளித்துள்ளது.

இருப்பினும் இது போதுமானதாக இல்லை என பிரான்ஸ் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் பரவின.

ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐரோப்பா முழுவதும் வேளாண் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருக்வது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...