tamilni 492 scaled
உலகம்செய்திகள்

கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு

Share

கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு மாணவி ஒருவரை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பியது இந்தியக் குடும்பம் ஒன்று. ஆனால், அந்த மாணவி கனேடிய மாகாணம் ஒன்றிற்கு வந்தபோது அவருக்கு ஏமாற்றம் ஒன்று காத்திருந்தது.

அந்த மாணவி கல்லூரி ஒன்றில் இணைந்து கல்வி கற்போம் என எதிர்பார்த்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு வந்த நிலையில், அவருக்கு அங்கு ஒன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன, அவர் கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க வழிவகை செய்யப்படவில்லை.

இந்த விடயம் குறித்து சமீபத்தில் பேசிய பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண உயர் கல்வித்துறைசார் அமைச்சரான செலினா ராபின்சன் (Selina Robinson), இதுபோல் மாணவ மாணவியர் ஏமாற்றமடயாமல் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், புதிய உயர் கல்வி நிறுவனங்கள் (post-secondary institutions), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிப்பதைத் தடை செய்கிறது.

அத்துடன், சர்வதேச மாணவர்கள் இனி இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களில் சேர, குறைந்தபட்ச மொழித்தேவை அவசியம் என்னும் விதியையும் அறிமுகம் செய்ய உள்ளது.

இது தொடர்பான விதிகள் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் செலினா ராபின்சன்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...