24 65b7902580300 1
உலகம்செய்திகள்

தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு

Share

தேவாலயத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய முகமூடி அணிந்த நபர்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு

துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த முகமூடி அணிந்த இரண்டுபேர், தேவாலயத்துக்குள் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துருக்கி நாட்டில், நேற்று தேவாலயம் ஒன்றில் ஆராதனை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஒருவர் தலையில் குண்டுபாய, தேவாலயத்தில் இருந்தவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, அப்போது எதிர்பாராவிதமாக துப்பாக்கியுடன் வந்தவர்களில் ஒருவருடைய துப்பாக்கி செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் Tuncer Cihan (52) என்பவர் பலியான நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு அவரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாமேயொழிய தேவாலயத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இருக்க வாய்ப்பில்லை என முதலில் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஆனால், பின்னர் ஐ எஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் குறிவைக்குமாறு தங்கள் அமைப்பின் தலைவர் அழைப்புவிடுத்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள், தாக்குதல் நடத்துவதற்காக அமைதியாக நடந்துவரும் காட்சிகள் சிக்கியுள்ளன.

பின்னர், நேற்று மாலையே, துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் கைது செய்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்போது, போலந்து நாட்டு தூதரான Witold Lesniak என்பவரும் அவரது குடும்பத்தினரும் தேவாலயத்துக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...