tamilnif 11 scaled
உலகம்செய்திகள்

காசா யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

Share

காசா யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று (26.01.2024) வழங்கவுள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர்.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...