உலகம்செய்திகள்

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு

Share
France India 16991
Share

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இன்று இந்தியாவின் ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார்.

இந்தியாவில் நாளை (26 ஜனவரி) 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வது வழக்கம்.

அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்து அளித்து மேக்ரானை வரவேற்றார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

அதற்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலை பேரணியில் பங்கேற்கும் அவர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மஹால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...