24 65ae4be2f0114
உலகம்செய்திகள்

Disease X… 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

Share

Disease X… 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

எக்ஸ் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொற்று குறித்து மீண்டும் எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதத்திற்குள்
உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ் குறிப்பிடுகையில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து கொடிய நோயை சமாளிக்க ஒரு தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்.

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், இந்த பொது எதிரிக்கு தீர்வு காண எதிர்வரும் மே மாதத்திற்குள் நாடுகள் ஒரு தொற்றுநோய் உடன்பாட்டை எட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது எந்த வடிவம், எப்போது தொடங்கும் என்பதை அறிய காத்திருக்காமல், உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் நாம் பெரும் எண்ணிக்கையிலான மக்களை இழந்தோம். காரணம் அப்படியான ஒரு நோயை நாம் இதுவரை எதிர்கொண்டதில்லை.

உலக சுகாதார அமைப்பு தனது பணியை துவங்கியுள்ளதாகவும், நிதி திரட்டவும், அந்த நோயால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பு தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எக்ஸ் தொடர்பில் இதுவரை உறுதியான தரவுகள் ஏதும் இல்லை என்றாலும், கொரோனா தொற்றை விடவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி 2018ல் இருந்தே எக்ஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...