உலகம்செய்திகள்

செங்கடல் பகுதியில் பதற்றம்: ஹவுதி ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

Share
tamilniv 2 scaled
Share

ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் அமெரிக்க நாசகாரக் கப்பலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை தமது போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக செங்கடல் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களால் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்து பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், யேமனின்ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, அந்த தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான கூட்டு இராணுவக் குழு தாக்குதல் நடத்தி வருகின்றது.

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது நிறுத்தப்படாவிட்டால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...