tamilni 246 scaled
உலகம்செய்திகள்

இந்தியா – பங்களாதேஷ் எல்லை நகரை கைப்பற்றிய மியன்மார் ஆயுதக் குழு

Share

மியான்மரில் பழங்குடியின ஆயுதக் குழு இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள ஒரு நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரக்கான் இராணுவம் (AA) என்று அழைக்கப்படும் குழு, ஞாயிற்றுக்கிழமை இரவு, அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கு முக்கியமாக இருக்கும் கலடன் ஆற்றின் துறைமுக நகரமான பலேத்வாவைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மர் பழங்குடியின ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

எல்லை ஸ்திரத்தன்மை பிரச்சினைகள் தொடர்பாக, அண்டை நாடுகளுடன் நாங்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்போம் என்று ஆயுதக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பகுதியில் நிர்வாகத்தையும் சட்ட அமலாக்கத்தையும் அவர்கள் கையகப்படுத்துவார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மர் பல முனைகளில் கிளர்ச்சியில் உள்ளது, அங்கு ஜனநாயக சார்பு இணை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இராணுவ எதிர்ப்பு குழுக்கள் பல இராணுவ நிலைகள் மற்றும் நகரங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளன.

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து 2021 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியதில் இருந்து இராணுவ ஆட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலா இது உள்ளது.

மியான்மரில் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள ஒரு நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...