tamilniv 4 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : 24ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

Share

இஸ்ரேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போரில் ஏறத்தாழ 8000 ஹமாஸ் போராளிகள் மற்றும் 24,100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 60,834 பேர் காயமுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும். எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும்.

எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர் தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும்.

இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....