tamilni 109 scaled
உலகம்செய்திகள்

கின்னஸ் சாதனையை இழக்கும் புர்ஜ் கலிஃபா

Share

உலகின் மிக உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள டுபாயின் புர்ஜ் கலிஃபா அந்த சாதனையை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கவுள்ளது.

சவுதியில் கட்டப்பட்டு வரும் ‛‛ஜெட்டா டவர்” கட்டடம் உலகின் மிகவும் உயரமான கட்டடம் என்ற சாதனையை படைக்கவுள்ளது.

டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, 828 மீற்றர் உயரமுடைய இக்கட்டடத்தின் கட்டுமான பணிகள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் திகதி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்தது.

உலகின் தலைசிறந்த நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிஃபாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா, இன்னும் சில ஆண்டுகளில் தனது சாதனையை இழக்கவுள்ளது.

அதாவது, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தற்போது நிர்மானிக்கப்பட்டு வரும் கிங்டம் டவர் கட்டடம் முழுமையடைந்தவுடன், புர்ஜ் கலிஃபா கட்டடத்தை விட உயரமானதாக அமையவுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள இதன் உயரம் 1,000 மீட்டருக்கும் மேல் இருக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவற்றின் கலவையாக இந்த கட்டடம் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...