OIP 13
உலகம்செய்திகள்

தென் கொரியா மீது வட கொரியா திடீர் தாக்குதல்: போர் மூளும் பீதியில் மக்கள்

Share

தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை 9 மணியளவில் தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுக்கு அருகில் வடகொரியா ஷெல் (ஏவுகணை அல்லது பீரங்கி குண்டு) தாக்குதலை நடத்தியுள்ளது.

கிடைத்துள்ள தகவலின் படி, மஞ்சள் கடல் பகுதியில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான Yeonpyeong மற்றும் Baengnyeong தீவுகளுக்கு இடையே வட கொரியா கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கும் சூழல் உருவாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் தென் கொரியா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

மேலும் வட கொரியாவின் இந்த அத்துமீற செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் தீவு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென் கொரிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...