tamilni 70 scaled
உலகம்செய்திகள்

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில்… நிறைவேறிய நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று

Share

2024 பிறந்து சில மணி நேரத்தில் நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்புகளில் ஒன்று நிறைவேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான நோஸ்ட்ராடாமஸ், ஜேர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 2019ல் கோவிட் தொற்றுநோய் தொடர்பிலும் துல்லியமாக கணித்த பெருமைக்குரியவர்.

தற்போது புத்தாண்டில் ஜப்பான் நாட்டை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தொடர்பிலும் அவர் கணிப்பு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 62 பேர்கள் பலியாகியுள்ளனர்.

நோஸ்ட்ராடாமஸ் தமது 2024 குறித்த கணிப்பில், வறண்ட பூமி மேலும் வறண்டு, பெரும் வெள்ளம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்துள்ளார். மேலும், மிக மோசமான நிலநடுக்கத்திற்கு பிறகு பேரலை மொத்தமாக நிலப்பரப்பை சூழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2024ல் சீனாவுடன் மோதல் ஏற்படும் என்றும், அரச குடும்பம் ஒன்றில் குழப்பம், கலக்கம் ஏற்படும் என்றும் காலநிலை மாற்றத்தால் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. உயிர் பிழைத்தவர்கள் தெருக்களில் கடும் குளிரை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்போது சடலங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து சில இடங்களில் 3 அடிக்கு மேல் அலைகள் எழும்பின.

நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் முதல் 72 மணி நேரம் மிக முக்கியம் என்றும், அதன் பின்னர் உயிர் தப்பியவர்களின் எண்ணிக்கை சருவடையும் என்றும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...