2 scaled
உலகம்செய்திகள்

ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

Share

ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஹொட்டல் நிர்வாகம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளது.

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஹொட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹொட்டல் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அப்போது பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, ரூ. 279 கொடுத்து பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.

இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளிப்பதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு அன்று ஹொட்டல் நிர்வாகி பாரத் குமார் மற்றும் அவரது மனைவி நீலிமா ஆகியோர் அந்த நபரை தேர்வு செய்தனர்.

அப்போது, திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஹொட்டல் நிர்வாகிகள் கூறும் போது, பிரியாணிக்கு கார் பரிசாக வழங்கும் புதுமையான திட்டத்தால் எங்களது ஹொட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...