உலகம்
ஜப்பானில் நிலநடுக்கம்: விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை- பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிப்பு
ஜப்பான் கடலில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களின் கடற்கரையில் மாலை 4 மணிக்குப் பிறகு நிலநடுக்கங்கள் பதிவாகியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.