sudeepandsalman21556188862
உலகம்செய்திகள்

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

Share

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

நடிப்பு, சினிமா தயாரிப்பு தவிர நடிகர் சல்மான் கான் வாடகை மூலமாக மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்து வருகிறார்.

நடிகர் சல்மான் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். அதில் ரியல் எஸ்டேட் ஒன்றாகும். இவருக்கு, மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மென்ட் தவிர பன்வெலில் ஒரு பண்ணை வீடு, கோராய் பீச்சில் ஒரு ஹாலிடே ஹோம், பாந்த்ரா கார்ட்டர் ரோடு என ஏகப்பட்ட அபார்ட்மென்ட்கள் சொந்தமாக உள்ளன.

மேலும், துபாயில் உள்ள புர்ஜ் பசிபிக் கட்டடத்தில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். இதனிடையே, பாந்த்ராவின் கார்ட்டர் ரோடில் உள்ள அவரது தாய்க்கு சொந்தமான பிளாட்டில் 19 அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.

சல்மான் கானுக்கு சான்டாகுரூஸ் லிங்க்கிங் ரோடில் உள்ள 4 மாடி கமர்ஷியல் பிளேஸ் தான் அதிக வருமானத்தை தருகிறது. 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடத்தை 2012 -ம் ஆண்டு ரூ.120 கோடிக்கு வாங்கினார்.

தற்போது, இந்த இடத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் மூலம் சல்மான் கானுக்கு மாதம் ரூ.90 லட்சம் வாடகை பணம் கிடைக்கிறது. முன்பு, பியூச்சர் குரூப் வசம் இருந்த இந்த இடத்தின் வாடகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வெர்சேஸ், என்டிசி சாக்லெட், ஒலிவியாலஜி போன்ற உணவு நிறுவனங்கள் உள்ளன. அதோடு, இந்த நிறுவனங்களில் மசாபா குப்தா, முகுல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் கோடிகளில் முதலீடு செய்துள்ளனர்.

சல்மான் கானுக்கு 9 வருவாய் ஆதாரங்களில் இருந்து வந்த வருமானம் மூலம் ரூ.2,907 கோடி நிகர சொத்து சேர்ந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...