201912251538504117 Bethlehem welcomes pilgrims for Christmas celebrations SECVPF
உலகம்செய்திகள்

பெத்லஹேமில் மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது: கிறிஸ்துமஸ் நாளில் வேதனை

Share

பெத்லஹேமில் மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது: கிறிஸ்துமஸ் நாளில் வேதனை

பெத்லஹேம் நகரத்தில் கிறிஸ்துமஸ் தினமான இன்று மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ‘Church of the Nativity’ தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவர். முக்கியமாக, கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் நகரமே விழாக்கோலம் போல காட்சியளிக்கும்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி முதல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையே போர் நடைபெற்று வருவதால், பெத்லஹேமிற்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாரும் வரவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பெத்லஹேம் பகுதியைச் சேர்ந்தவர் பேசுகையில், “இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தப்பட வேண்டும். இதனை வெளி உலகத்திற்கு காண்பிக்கும் நோக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திப்பது என முடிவு செய்துள்ளோம்” என்றார்.

மேலும், பரிசு பொருட்களை விற்கும் ரோனி தபாஷ் என்பவர், “யாரும் வரமாட்டார்கள் என தெரிந்தும் கடைகளை திறந்து வைத்துள்ளன். கடந்த 2 மாதங்களாக யாரும் வருவதில்லை” என்றார்.

அதோடு காஸாவில் உள்ள கத்தோலிக்க ஹோலி சர்ச்சில் உள்ள நபீலாஷாலா, “இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை. ஆலய மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது. இப்படி இருக்கையில் எவ்வாறு கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...