உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ

Share
rtjy 82 scaled
Share

பிலிப்பைன்ஸ் மீன்பிடி கப்பல் மீது தண்ணீர் தாக்குதல்: சீன கடற்படை அத்துமீறல்: வீடியோ

தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் உள்ள மணல்திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மணல்திட்டுக்கு அருகில் நின்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு ஒன்றை சீன கடற்படையும், சீன ஆயுதக் குழுவின் படகும் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள பிலிப்பைன்ஸ்  மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா தன்னுடைய அதிகாரம் முழுவதையும் தென் சீன கடல் பகுதியில் நிலைநாட்ட முயன்று வருகிறது.

அதே சமயம் சர்வதேச கடல் வழித்தட உரிமையை சீனா பறிப்பதாகவும் அமெரிக்கா கருதி வருகிறது.

மீன்பிடி படகு மீது சீன கப்பல்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...