rtjy 72 scaled
உலகம்செய்திகள்

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

Share

எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி

செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

முதலில் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

மேலும், நவம்பரில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்த நிலையில் நவம்பர் மாதம் 13ஆம் திகதி ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனிக்குள் நுழையும் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியாவின் எல்லையில் ஜேர்மனி 2015 முதல் எல்லை சோதனைகளை மேற்கொண்டதோடு அக்டோபரில் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 9,200 அங்கீகரிக்கப்படாத உள்ளீடுகள் கண்டறியப்பட்டதாகவும் மேலும் 4,370 தடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...