உலகம்செய்திகள்

ஹமாஸின் சுரங்கப்பாதைகளை அழிக்க இஸ்ரேல் புது யுக்தி

tamilni 90 scaled
Share

ஹமாஸின் சுரங்கப்பாதைகளை அழிக்க இஸ்ரேல் புது யுக்தி

காசாவின் அடியில் உள்ள ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி மத்தியதரைக் கடலில் இருந்து நிலத்தடி வலையமைப்பு மூலம் நீரை சுரங்கப்பாதைகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் இந்த பம்புகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த திட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றினால், காசா பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படுவதோடு மேலும் பல அபாயங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டில் எகிப்தில் சுரங்கப்பாதைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தபோது, உள்ளூர் விவசாயிகள் தங்கள் அறுவடை அழிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...