உலகம்செய்திகள்

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிப்பு

rtjy 23 scaled
Share

மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிப்பு

மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.

மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை நிரப்பி இருக்க வேண்டும் என மலேசிய குடிவரவுத்துறை முகப்புத்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(01.12.2023) பதிவிட்டுள்ளது.

மலேசிய நிரந்தர குடிவாசிகள், மலேசிய தானியக்க குடிவரவு முறை அட்டைதாரர்கள் மற்றும் குடிவரவு நடைமுறையை நிறைவேற்ற தேவையில்லாத சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இடைவழிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக குடிவரவு துறையின் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை பிரிவின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள் தங்கள் பெயர், நாட்டுரிமை, கடவுச்சீட்டு விவரம் போன்ற அடிப்படை விவரங்களை மின்னிலக்க இணையப்பக்கத்தில் மலேசியா வருவதற்கு 3 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும் என அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரியில், ஜோகூர் பாருவில் இருக்கும் இரண்டு தரைவழி சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூர் வாசிகள் இந்த மின் நுழைவு வசதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு மலேசியாவின் மின்னிலக்க வருகையை அட்டை முன்னரே நிரப்பி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

Share
Related Articles
19 7
உலகம்செய்திகள்

கனடா பிரதமரை கூப்பிட்டுவைத்து அவமதித்த ட்ரம்ப்: கார்னியின் பதிலடி

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் கனடா...

20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது....

16 8
உலகம்செய்திகள்

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! விஜய் பெருமிதம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை...

18 7
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூரில் Jem தலைவர் மசூத் அசார் கொல்லப்பட்டாரா?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் Jem பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 9 பேர்...