tamilni 9 scaled
உலகம்செய்திகள்

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரிய ஹமாஸ்

Share

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரிய ஹமாஸ்

ஜெருசலேம் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஹமாஸ் தரப்பினர் உரிமை கோரியுள்ளனர்.

ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஹமாஸ் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அதேநேரம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...