tamilni 426 scaled
உலகம்செய்திகள்

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

Share

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டுள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், அதே சமயம் 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

அத்துடன் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மேலும் 2 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டது.

ஹமாஸ் படையினருடன் நெருக்கமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் வழங்கிய தகவலில், அதே பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழைய நிபந்தனைகளின் படி, இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக, நாள் ஒன்றுக்கு 10 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலி விமானங்கள், ட்ரோன்கள் காசா மேற்பரப்பில் பறக்காமல் இருப்பது ஆகியவை உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும், ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...