உலகம்செய்திகள்

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

Share
tamilni 426 scaled
Share

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டுள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், அதே சமயம் 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

அத்துடன் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மேலும் 2 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டது.

ஹமாஸ் படையினருடன் நெருக்கமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் வழங்கிய தகவலில், அதே பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழைய நிபந்தனைகளின் படி, இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக, நாள் ஒன்றுக்கு 10 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலி விமானங்கள், ட்ரோன்கள் காசா மேற்பரப்பில் பறக்காமல் இருப்பது ஆகியவை உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும், ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...