உலகம்செய்திகள்

ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தி

rtjy 270 scaled
Share

ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தி

ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, அந்நாட்டின் இராணுவ அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் அகதிகள் தொடர்பாக இயற்றப்பட்ட இந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதோடு இதன் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்கள் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்தும் அவர்கள் விடுதலைசெய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் நைஜரின் அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம், கைப்பற்றியதிலிருந்து ஐ.நா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு நைஜா் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அந்த நாட்டு இராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளமையை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிக்கும், நைஜருக்கும் இடையிலான தூதரக உறவு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...