5 21 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

Share

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

புலம்பெயர்வோரின் வருகையை விரும்பாத சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறை முதலான சில அத்தியாவசியத் துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ள அதே நாளில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக மற்றொரு செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்,மருத்துவத்துறையில், செவிலியர்கள், endocrinologists மற்றும் பார்மஸி பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், developers, software மற்றும் applications analysts, SAP consultants ஆகிய பணி செய்வோர், பொறியியல் துறையில், mechanical engineering technicians, heating planners ஆகிய பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

அதே நேரத்தில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம். விடயம் என்னவென்றால், இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு உள்ளது.

அதாவது, பணியாளர் பற்றாக்குறை நிவுவதால், வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு மருத்துவமனையில் குறைவான செவிலியர்களே உள்ளதால், அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.

கொஞ்சம் செவிலியர்கள் ஏராளமான நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நிலையிலும், குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறதாம். வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் சொந்த வேலைகளையும், வீட்டையும் கவனிக்க முடியாத நிலைமை ஆகிய காரணங்களால் செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

சமீபத்திய தகவல்களின்படி, 36 சதவிகித இளம் செவிலியர்கள், 20க்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள், சில ஆண்டுகள் வேலை பார்த்த நிலையிலேயே வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

ஆக, சுவிட்சர்லாந்தில், சுமார் 7,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவாம்!

Share

Recent Posts

தொடர்புடையது
25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...

25 690c62aa700e2
செய்திகள்இலங்கை

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர் 2 கிலோ ஹெரோயினுடன் கைது: நவம்பர் 26 வரை விளக்கமறியலில் நீதிமன்று உத்தரவு!

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர், சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

selvam adaikalanathan 8
செய்திகள்அரசியல்இலங்கை

வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் மோசமான செயலால் – செல்வம் அடைக்கலநாதன்!

கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம் (பாதீடு) சிறப்பானது என்று தாம் கூறியது தவறு என்பதைத் தற்போது...

28120819 14
இலங்கைசெய்திகள்

வீதி விளக்குக் கட்டணம்: கொழும்பு உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியுள்ளன – எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி!

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள், வீதி விளக்குகளுக்கான மின்சாரக்...