tamilni 409 scaled
உலகம்செய்திகள்

காசாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

Share

காசாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் திகதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கி மேலும் பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, எகிப்து, கட்டார் மத்தியஸ்தம் செய்ததின் அடிப்படையில், 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்படது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கட்டார் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...