rtjy 225 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

Share

பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள Tower of London என்ற கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் சுமார் 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல இடமும், பிரித்தானிய ராஜ குடும்பத்தின் கிரீடம் மற்றும் அணிகலன்களின் (crown jewels) காப்பிடமும் ஆகும்.

உலக பிரசித்தி பெற்ற Tower Bridgeல் செல்லும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய மக்களும், உல்லாசப் பயணிகளும் பல மணிநேரம் நடந்த இம்மாவீரர் வணக்கத்தைப் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயகத்தில் துயிலும் இல்லங்கள் சிதைக்கப்பட்டு, இன்றும் அவற்றின் எச்சங்கள் கூட இலங்கை அரசால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் லண்டன் மாநகரத்தில் இவ்வணக்கம் எந்தவித தடையும் இன்றி உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...