tamilni 364 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னடைவு

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பின்னடைவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதிலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக இன்று முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என இருதரப்பு தகவல்களும் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இடையே, 45 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட போது, அந்நாட்டைச் சேர்ந்த 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

அவர்கள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே, கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, காசாவில் நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது.

இதனடிப்படையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட, 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டது. மேலும், 10 பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பு விடுவித்தால், கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது.

இதன்படி பிணைக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் அரசு விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது.

இதற்கமைய நேற்று காலை 10:00 மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹாங்பி, ”இந்த போர் நிறுத்தம் நடைமுறைக்கு வர சற்று தாமதம் ஏற்படும்,” என, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு ஆலோசகரின் இந்த கடைசி நிமிட உரையாடலானது, போர் நிறுத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில இறுதி முடிவுகள் குறித்து தெளிவு ஏற்பட்டதும், இன்று காலை முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ”இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் போர் மீண்டும் தொடரும். 240 பிணைக் கைதிகளை மீட்டு, ஹமாஸ் படைகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம்,” என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...