2 12 scaled
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Share

வெளிநாடொன்றில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்\

கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்தார்கள். அவர்கள் என்ன காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து கத்தார் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பீரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் ஆவர்.

இதற்கிடையில், இந்திய தூதர் தீபக் மிட்டல் முதலான இந்திய அதிகாரிகள் கத்தார் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தனிமைச் சிறையிலடைக்கப்பட்டிருந்த இந்தியர்கள், இரண்டு பேர் அடைக்கப்படும் சிறை அறைகளில் தங்கள் சக இந்தியர்களுடன் அடைக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தற்போது, இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கத்தார் நீதிமன்றம், இந்தியாவின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலிக்க இருப்பதாக அந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...