rtjy 195 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஹமாஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கான பதில் தாக்குதலையும் இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய , ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தது.

இது தொடர்பில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,

“நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விடயங்கள் தொடர்பில் நெதன்யாகு, அந்நாட்டு அரசுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வர் என அந்நாட்டு அரச தகவல் தொடர்பாடல் அமைச்ச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அரசின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...