rtjy 195 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஹமாஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கான பதில் தாக்குதலையும் இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய , ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தது.

இது தொடர்பில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,

“நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விடயங்கள் தொடர்பில் நெதன்யாகு, அந்நாட்டு அரசுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வர் என அந்நாட்டு அரச தகவல் தொடர்பாடல் அமைச்ச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அரசின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...