tamilni 307 scaled
உலகம்செய்திகள்

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

Share

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல்

இஸ்ரேல் காசா போரில் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக, பிரான்ஸ் தனது Dixmude என்னும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்ப தயாராகி வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Dixmude கப்பல், வார துவக்கத்தில் புறப்பட்டு, சில நாட்களில் எகிப்தை சென்றடையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், வார துவக்கத்தில், 10 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஒன்றையும் காசாவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 23 மற்றும் 30 ஆம் திகதிகளில், ஐரோப்பிய விமானங்களில் மருத்துவ உபகரணங்களை அனுப்பும் ஐரோப்பிய முயற்சியிலும் பிரான்ஸ் தனது பங்களிப்பைச் செய்யும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்சுக்கே கொண்டுவரப்பட இருக்கும் குழந்தைகள்
மேலும், காசா பகுதியில் உள்ள, அவசர சிகிச்சை தேவைப்படும் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை வெளியேற்றி மருத்துவமனைகளுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

காசாவுக்கு போர்க்கப்பலை அனுப்பும் பிரான்ஸ்: மருத்துவ உதவிக்காக என தகவல் | France To Send Warship To Gaza

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...