tamilni 248 scaled
உலகம்செய்திகள்

மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கிவைத்த பெருந்தொகையான ஆயுதங்கள்

Share

மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கிவைத்த பெருந்தொகையான ஆயுதங்கள்

காசா அல்ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் காணொளியை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

மேலும், காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் கட்டளை மையத்தை கட்டியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றிய காணொளி வெளியாகியுள்ளது.

அல் ஷிஃபா மருத்துவமனையின் சுரங்கப்பாதையில் புல்டோசர்களைக் கொண்டு இஸ்ரேலிய வீரர்கள் தேடி வருகின்றனர்.

மேலும், ” நாங்கள் ஷிஃபா மருத்துவமனையை குறிவைத்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறுகிறோம்,” என்று காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் யாரோன் ஃபிங்கெல்மேன் இராணுவத்தின் டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய மருத்துவமனையைச் சுற்றி புல்டோசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் வளாகத்திற்குள் நுழைந்ததால் அனைத்து துறைகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை துண்டிக்கப்பட்டதாக அல் ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...