4 10 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

Share

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

இஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் படங்களை வெளியிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டவேளை எந்த ஊடகமும் அங்கு காணப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆயுதங்களை கொண்டுவந்து அவற்றை மருத்துவமனையில் வைத்துவிட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் என்பதை நிராகரிக்க முடியாது என ஹமாஸின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுத்து  காசாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவீச்சுகள்ள முற்றுகை தாக்குதல் போன்றவற்றால் காசாவில் 25 மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்தான் மருத்துவமனைகளுக்குள் இருந்து செயற்படவில்லை என தெரிவித்துள்ளது.

இரண்டுதரப்பு தெரிவிப்பதையும்உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கின்றது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...