உலகம்செய்திகள்

ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை

Share
1 23 scaled
Share

ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் பாலஸ்தீனத்தின் காசா நகரம் முற்றிலுமாக சிதைந்துள்ளது.

காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதே சமயம் இந்த போர் நடவடிக்கையில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால் காசாவில் உள்கட்டமைப்பு வசதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதால் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தீவிர சண்டையின் காரணமாக ஏற்பட்ட மின்தடை, மருத்துவ நுகர்பொருள், ஆக்ஸிஜன், உணவு, மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பற்றாக்குறையால் காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் சேவைகள் நிறுத்தப்பட்டதாக செவ்வாய்கிழமை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள 30 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் ஒன்றில் மட்டுமே மருத்துவ வசதிகளை நோயாளிகள் பெற முடியும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் குறைந்தது 500 நோயாளிகள் தங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...