tamilni 189 scaled
உலகம்செய்திகள்

லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் போர் எச்சரிக்கை…!

Share

லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் போர் எச்சரிக்கை…!

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது.

எனவே லெபனானுக்கு எதிராக போர் தொடுக்கும் அபாயம் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

மேலும் தெரியவருகையில், ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில், தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான எல்லையிலும் மோதல்கள் அதிகரித்துள்ளது.

காசா மக்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

நேற்று ஒரு மணி நேரத்திற்குள் 15 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில் நான்கு ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளர்.

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் ஹமாஸின் ஆயுதக் களஞ்சியமாக இருப்பதாக நம்பும் இஸ்ரேல், லெபனானுக்கு எதிராக முழுமையான போருக்கான அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile
செய்திகள்உலகம்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. பிரான்சில்...

1756280071 Digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

இலங்கை அரசாங்கம் இந்நாட்டுக் குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் கையெழுத்திட்ட...

image 1000x630 9
செய்திகள்இலங்கை

அம்பாறையில் முட்டை விலை குறைவு: வெள்ளை முட்டை ரூ.25-க்கு விற்பனை

அம்பாறை மாவட்டத்தில் தற்போது வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று...

image 1000x630 8
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...