உலகம்செய்திகள்

அமெரிக்காவின் கருத்து காஸா மருத்துவமனை மீது படுகொலைகளை தூண்டவே வழிவகுக்கும்: ஹமாஸ் எச்சரிக்கை

23 655152bab5ade 1
Share

அமெரிக்காவின் கருத்து காஸா மருத்துவமனை மீது படுகொலைகளை தூண்டவே வழிவகுக்கும்: ஹமாஸ் எச்சரிக்கை

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இயங்குவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் கருத்து ஆபத்தை விதைக்கும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா குறிப்பிடுகையில், ஹமாஸ் படைகள் அங்கு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளனர். அந்த மருத்துவமனைக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர் எனவும் பென்டகன் துணை செய்தி செயலாளர் சப்ரினா சிங் தெரிவித்தார்.

அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டுள்ளது தொடர்பாக இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

ஆனால் அல்-ஷிஃபா மருத்துவர்கள் தெரிவிக்கையில், நோயாளிகள் மற்றும் தஞ்சம் தேடும் மக்கள் பயங்கரமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சப்ரினா சிங் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீனிய போராளிக் குழுக்கள் காஸாவில் உள்ள மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளை தங்கள் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பணயக்கைதிகளை வைத்திருப்பதற்கும் ஒரு மறையாக பயன்படுத்துவதாக அமெரிக்காவிற்கு தகவல் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒருபோதும் முடிவெடுக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அல்-ஷிஃபா மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் தஞ்சம் தேடியுள்ள அப்பாவி மக்கள் என சுமார் 2,300 பேர்கள் சிக்கியிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கையில், ஹமாஸ் படைகளை ஒழிப்பதே இலக்கு, மருத்துவமனைகள் எங்கள் இலக்கல்ல என விளக்கமளித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்காவின் கருத்து காஸாவில் மேலும் படுகொலைகளை தூண்டும் நடவடிக்கை என ஹமாஸ் படைகள் கருத்து தெரிவித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...