rtjy 142 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளர்: விசா இரத்து

Share

எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் விசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் காசா மீதான தாக்குதலையும், இஸ்ரேல் – ஹமாஸ் போரையும் நிறுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பேரணிக்கு எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மொடாஸ் மாதார் (Moataz Matar) ஆதரவு தெரிவித்த நிலையிலேயே அவருடைய வீசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளது.

மேலும் ஒரு நிகழ்ச்சியில் இவர் இஸ்ரேல் மீதான ஹமாஸின் முதல் தாக்குதலை வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்று விவரித்திருந்தமை இஸ்ரேலிய ஆதரவாளர்களால் கண்டனத்தையும் பெற்றியிருந்தது.

முன்னதாக, இஸ்ரேலை ஹமாஸ் தாக்கிய சிறிது நேரத்திலேயே யூத-விரோத நடத்தை என்று குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உள்துறை குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் யூத-விரோத நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அலுவலகத்தால் அவர்களது விசாவை இரத்து செய்யக்கூடிய குறைந்தபட்சம் 6 வெளிநாட்டவர்களின் ஒருவராக மொடாஸ் உள்ளார் என குறித்த ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஜென்ரிக் இதுகுறித்து ஊடகத்திடம் கூறுகையில், ”விசாவின் சிறப்புரிமையை பிழையான முறையில் பயன்படுத்தி செய்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயல்களை அங்கீகரிக்கும், வகையில் பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் வழங்கப்படமாட்டாது” என தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சால் விசா இரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவராக மொடாஸ் கருதப்படுகிறார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...