1779458 rain scaled
உலகம்செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Share

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாகும்.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.

தொடர்ந்து 16ம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழகத்தில் 14ம் தேதி முதல் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...