23 654f4c6a55b09
உலகம்செய்திகள்

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

Share

மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை: காசா நிலைமை குறித்து WHO தலைவர் வேதனை

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காசாவில் நடைபெறும் அவலம் வேதனை தருவதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவத்திற்கும், ஹமாஸ் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை பாலஸ்தீனத்தின் காசாவில் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட 11, 000 பேர் காசாவில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போரினால் காசாவில் ஏற்பட்டுள்ள அவலநிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், போரினால் காயமடைந்தவர்களுக்கு காசாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் போரில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. தரவுகளின் அடிப்படையில் போரில் உயிரிழந்தவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது கூடுதல் வேதனை அளிக்கிறது என WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
received 3346662718994367
செய்திகள்இலங்கை

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிக்கு இராணுவத்தினர் இடையூறு – நிர்வாகத்தினர் கோரிக்கை

முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக...

25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும்...

1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...