உலகம்செய்திகள்

4 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல்! வெள்ளை மாளிகை அறிவிப்பு

Share

ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றுவதற்கான போரில், நான்கு மணிநேர இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தினசரி இடைநிறுத்தங்களை நிறுவுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களில், தினசரி நான்கு மணிநேர மனிதாபிமான இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஹமாஸ் பணயக்கைதிகளை வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரேல் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு இடைநிறுத்தத்தின் நேரமும் மூன்று மணிநேரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் எனவும், அவை இன்று தொடங்கும் எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...