1 1 4 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனக் கொடியுடன் எவரும்… பூமியில் வாழ தகுதியற்றவர்கள்: மிரட்டல் விடுத்த அமைச்சர்

Share

பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின் உறுப்பினராவார். இவரே வட பகுதியை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், எவரொருவர் பாலஸ்தீனம் அல்லது ஹமாஸ் கொடியை ஏந்துகிறார்களோ அவர்கள் பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ள அவர்,

நாஜிகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் என எவரும் காஸா பகுதியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியில் இருந்து இனி பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, அப்பகுதியில் அணுகுண்டு வீசுவதே எனவும் அமைச்சர் Amichai Eliyahu கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது கருத்துக்கு உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. மேலும், காஸா பகுதியில் இஸ்ரேல் மக்களை குடியமர்த்துவதை ஆதரித்துள்ள இவர், சட்டவிரோத குடியமர்த்தலையும் ஊக்குவித்தார்.

பாலஸ்தீன மக்கள் இங்கிருந்து ஏதேனும் பாலைவனத்திற்கோ அல்லது அயர்லாந்துக்கோ செல்லட்டும், காஸாவில் குடியிருக்கும் காட்டுமிராண்டிகள் தாங்களாகவே தீர்வு காண வேண்டும் எனவும் எனவும் கொந்தளித்துள்ளார்.

ஆனால், ஹமாஸ் படைகளுக்கு எதிரான தற்போதைய போர் தொடர்பில் முடிவுகள் எடுக்கும் அமைச்சர்கள் குழுவில் Amichai Eliyahu இடம்பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

பாலஸ்தீன தேசியக் கொடி ஏந்தியவர்களை கொல்ல வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்திய அமைச்சர் Amichai Eliyahu-வின் கருத்துக்கு கடும் கண்டனம் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...