rtjy 89 scaled
உலகம்செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம்

Share

காசாவில் போர் நிறுத்தம்

காசாவில் 3 நாள்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் தினசரி நான்கு மணிநேரம் சண்டையை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

ஹமாஸிடம் உள்ள 10-15 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதையடுத்து அதற்கு பதிலாக காசாவில் 3 நாள்களுக்கு மட்டும் போரை நிறுத்திவைக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காசாவிற்கு உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸில் மேற்கு மற்றும் அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, அரசு சாரா அமைப்புகள் இணைந்து காசாவிற்கு எவ்வாறு எந்த வகையான உதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்துவருகின்றன.

Share
தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...