உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்

tamilni 113 scaled
Share

போர் நிறுத்தத்தை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் அமைப்புடனான நடைபெற்று வரும் போரை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

அத்துடன் ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காசா எல்லையில் சில நாட்களில் மாத்திரம் 241 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, 569 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இறந்தவர்களில் 4,324 குழந்தைகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தம் செய்ய முடியாது என அறிவித்துள்ளமை உலக மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பில் உலகின் பல பாகங்களிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்ரோல் அதனை நிராகரித்து வருகின்றது.

அத்துடன் ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெத்தன்யாகு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை மீட்பது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

பிணைக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மருத்துவ வசதிகளின்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் உணவு மருந்து நீர் மற்றும் மின்சாரம் ஆகியன காசாவில் தடைப்பட்டுள்ள நிலையில் போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதாக ஜக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...